Powered By Blogger

Oct 18, 2015

படித்ததில் பிடித்தது

இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல..
கடவுள் மேல அவ்வளவு நம்பிக்கை..
****************************************
படிச்ச நாம தான் அறிவாளினு மட்டும் நினைக்கூடாது.
நமக்கெல்லாம் ஒளியை தந்த தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது வெறும் மூன்று மாதங்கள் தான்..
********************************************
பத்து பேர் வேலைய ஒருத்தரே செஞ்சா அது தனியார் வேலை………
பத்து பேர் சேர்ந்து செஞ்சும் ஒரு வேலையும் நடக்கலைன்னா அது கவர்மென்ட் வேலை...
****************************************
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும்,
நேரத்துக்கு தூங்குற ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பா...
************************************
கம்யுனிசம்ன என்ன ??
உனக்குனு ஒரு பிகர் செட் ஆனதுக்கு அப்புறம்……..
உன்ன தேடி வர ஓவ்வொரு பிகரும் அடுத்தவனுக்குரியது.
‪#‎கம்யுனிசம்‬...
*****************************
மனுசனுக்கு வாழ்க்கைல ரெண்டே ‎பிரச்சனைதான்
இருப்பவனுக்கு ‪#‎சொத்து‬ பிரச்சனை
இல்லாதவனுக்கு ‪#‎சோத்து‬ பிரச்சனை
******************************
"A Love" இது தமிழ்ல எழுதுனா... "எழவு"னு வருது…….
உண்மைய சொல்ற "தமிழ் வாழ்க"..
**********************************
சிலரை ஏன் சந்தித்தோம் என்றும்
சிலரை ஏன் இவ்வளவு தாமதமாய் சந்திக்க நேர்ந்தது
என்றும் தோன்றுவதே வாழ்க்கை..
*************************************
ஒருவரை"கெட்டவன்"என்று
அவர்களே தீர்மானித்துவிடுகிறார்கள்

"நல்லவன்"என்பதற்க்கு மட்டும்
அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்.!
**********************************
எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.
அதை தெரிந்து கொண்ட பெண்கள்
மளிகைகடைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
************************************
"அவன் எனக்கு நல்ல நண்பன்" என்பதைவிட..
"அவனுக்கு நான் நல்ல நண்பன்" என்பது தான் நட்பின் சிறப்பு.
**************************************
அவரவர் கடவுளுக்கு கோயில்கட்டிய காலம்போய்……
அவரவர் கடவுளுக்கு சேனல்கள் ஆரம்பித்துவிட்டார்கள்...
***********************************
அப்துல்கலாம் கடைசிவரை இந்தியாவிற்கே உழைத்தார்னு சொன்னவுங்க..
இன்னைக்கு அமெரிக்கா கம்பனிக்கு உழைக்க போன
சுந்தர் பிச்சைய பெருமையா பேசுது.
‪#‎இவங்கள_புரிஞ்சுக்கவே_முடில‬..
************************************
தடுக்கி விழுந்திட்டா ஓடிபோய் தூக்கிவிட்டது தாத்தா தலைமுறை……
கண்டுக்காம போனது அப்பா தலைமுறை………
நின்று போட்டோ எடுத்து கொண்டு இருப்பது நம் தலைமுறை. ‪
#‎தலைமுறை‬கள்
*********************************
இங்கு,
மீசையில்லா பாரதியும் உண்டு!
மீசையுள்ள அன்னை தெரசாவும் உண்டு!
புரட்சி ஆண்களால் மட்டுமே
செய்ய முடிந்ததும் அல்ல !!
அன்பு பெண்களால் மட்டுமே
தர முடிந்ததும் அல்ல !!
ஆணுக்குள்ளும் மென்மை உண்டு!
பெண்ணுக்குள்ளும் வீரம் உண்டு!!.
****************************************
சரித்திரத்த திருப்பி பாத்தா,
அது எனக்கு கத்துகுடுத்தது ஒண்ணே ஒண்ணுதான்.
நாம வாழனும்னா நேரா நேரத்துக்கு சாப்புடனும்.
***************************************
முத்தம் கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்துவிடுகிறார்கள்,
கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தப்பின் தருகிறார்கள்
‪#‎குழந்தைகள்‬��������..
************************************

No comments:

Post a Comment