Powered By Blogger

Jun 26, 2017

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:*

ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

💙செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

👰செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

👬செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

🙇கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

🌡இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

🍷🍾🍺🚬💊🛌🏍🚕 *கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.*
From our friend T. Ganesh...

💰💷💶 *கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.*

Jun 21, 2017

86400 FURMULA

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -
"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை😀😀

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -
#காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில் 86400 வினாடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?
🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.🏃
சந்தோஷமாகஇருங்கள் -

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - 🌈

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்

Jun 19, 2017

அனைத்து நோய்க்கும் மருந்து”

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார்.

அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.

அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்க லாமே?!''  என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
 
உடனே ராக்ஃபெல்லர்,

''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக...இப்போது
எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான்.

கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது.

வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான்.

உழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கை யுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.

ஆம்.,நண்பர்களே.,

மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான்.

உழையுங்கள்!  உழையுங்கள்! 

அதுவே அனைத்து நோய்க்கும் மருந்து”...🌹🙏🌺

Jun 11, 2017

இன்றே இப்பொழுதே என்பது வெற்றியின் மந்திரம்!

நாளை பின்பு என்பது தோல்வியின் ஆரம்பம்!

*இன்றே செய்வீர்!*
*நன்றே செய்வீர்!*

என்றும் எல்.ஐ.சி முகவர் பணியில்

சிறிய தூண்டில்

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா என்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன

மனோசக்தி

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.

எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான்  பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே!

யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி!

பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?

எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...

அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான்.

நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல...

அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!

என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார்.

மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி!

மகான் கொடுத்த ஓடு ஐயா...

தர்மப்பிரபு!

கடைக்காரர் ஓட்டைச்

சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட...

அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,

இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க

கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?

என சொல்கிறார்.

இதே போலத்தான்...

நாமும் நமக்குள் இருக்கும்...

ஆழ்மனத்தின்...

தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,

உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

உடனே ஜொலிக்க ஆசைப்படாதே!

ஒரு முத்து என்பது
சிப்பியின் 12 ஆண்டு
தவம்.!

துளித்துளியாய் ஒளிர்!
ஒரேயடியாக வந்த வெள்ளம் வற்றிவிடும்.!

பணிவாய் இருப்பதைவிடக்
கனிவாய் இருப்பது நலம்.!

எரிந்து விழாதே
அப்படி விழுவது
சாம்பலான
கூரைகள் மட்டுமே!

கடவுள் உனக்கு
முகவரிகளைத்தான்
தருவார்.
நீதான் போய்
தட்ட வேண்டும்.!

உதவி கேள்
கெஞ்சாதே!
உதவி செய்
உறிஞ்சாதே.!

நோகாத நெல் உமியாகிறது!
அடிக்க அடிக்க உதிரும்
நெல் அன்னமாகிறது.!
அடிபட்டு அடிபட்டு
வடிவம் பெற்ற எதுவுமே
வணங்கப்படும்!

உதாரணம்
கடவுள் சிலை.

Jun 9, 2017

ஹெல்த் இன்சூரன்ஸ்

*_நண்பர்களின் கவனத்திற்கு_*

🌟 *_தனி நபர்,_*

🌟 *_குடும்பம்,_*

🌟 *_60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள்_*

🌟 *_சர்க்கரை நோயுற்றவர்கள்,_*

🌟 *_ஆஞ்சியோ/ பைபாஸ் சர்ஜரி செய்துள்ளவர்கள்,_*

🌟 *_தனி நபர் விபத்து காப்பீடு, குறைந்த செலவில் விபத்தில் மருத்துவ செலவு மற்றும்  இழப்பீடு_*

🌟 *_குரூப் - ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விபத்துக் காப்பீடு,_*

🌟 *_தொழிலாளர் நலக் காப்பீடு - தனியாகவும் / குழு வாகவும்,_*

🌟 *_வெளிநாடு செல்பவர்களுக்கு Overseas Mediclaim Policy ,_*

🌟 *_பள்ளி /கல்லூரி  மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு, Students care_*

என அனைத்து தரப்பினருக்கும் *_ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்_* பாலிசி மூலம் மிகச்சிறந்த முறையில் பலன்களை அடையலாம்.

*_ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி_"* எடுப்பதன் மூலம்

🌟 *_ரூம் வாடகை,_*
🌟 *_மருத்துவர் கட்டணம்,_*
🌟 *_நர்சிங் கட்டணம்,_*
🌟 *_ஆபரேசன் செலவுகள்,_*
🌟 *_மருந்து, மாத்திரை செலவுகள்,_*
🌟 *_இரத்தம்,_*
🌟 *_ஆக்ஸிஜன்_*
🌟 *_லேப் பரிசோதனைகள்,_*
🌟*X-Ray,USG,CT,MRI Scans*
🌟 *_ஆம்புலன்ஸ் கட்டணம்,_*

முதலிய மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளுக்கு

*_பணம் செலுத்தாமலேயே கட்டணமில்லா மருத்துவ சேவை சிகிச்சை பெற முடியும்,_*

மேலும்
நாம் செலுத்தும் பிரிமியத்திற்கு
*வருமான வரி 80-D_* - பிரிவின் கீழ் ரூ.60000 வரை வருமான வரி விலக்கு பெறலாம்.

*மேலும் விபரங்களுக்கு*
தொடர்பு கொள்ளவும்:

  நன்றியுடன்...

  D.SELVAN
  Chief Advisor

சிறுமி கேட்டாள்

*வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..*

  *நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?*

  *அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?*
 
*நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?*

  *ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...*
 
*உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?*

  *என்ன கேள்வி இது..?  நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  "*

*அப்போ ஏம்மா  என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?*
*அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? "* 

*இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!

ஹெல்த் இன்சூரன்ஸ்

*_நண்பர்களின் கவனத்திற்கு_*

🌟 *_தனி நபர்,_*

🌟 *_குடும்பம்,_*

🌟 *_60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள்_*

🌟 *_சர்க்கரை நோயுற்றவர்கள்,_*

🌟 *_ஆஞ்சியோ/ பைபாஸ் சர்ஜரி செய்துள்ளவர்கள்,_*

🌟 *_தனி நபர் விபத்து காப்பீடு, குறைந்த செலவில் விபத்தில் மருத்துவ செலவு மற்றும்  இழப்பீடு_*

🌟 *_குரூப் - ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விபத்துக் காப்பீடு,_*

🌟 *_தொழிலாளர் நலக் காப்பீடு - தனியாகவும் / குழு வாகவும்,_*

🌟 *_வெளிநாடு செல்பவர்களுக்கு Overseas Mediclaim Policy ,_*

🌟 *_பள்ளி /கல்லூரி  மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு, Students care_*

என அனைத்து தரப்பினருக்கும் *_ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்_* பாலிசி மூலம் மிகச்சிறந்த முறையில் பலன்களை அடையலாம்.

*_ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி_"* எடுப்பதன் மூலம்

🌟 *_ரூம் வாடகை,_*
🌟 *_மருத்துவர் கட்டணம்,_*
🌟 *_நர்சிங் கட்டணம்,_*
🌟 *_ஆபரேசன் செலவுகள்,_*
🌟 *_மருந்து, மாத்திரை செலவுகள்,_*
🌟 *_இரத்தம்,_*
🌟 *_ஆக்ஸிஜன்_*
🌟 *_லேப் பரிசோதனைகள்,_*
🌟*X-Ray,USG,CT,MRI Scans*
🌟 *_ஆம்புலன்ஸ் கட்டணம்,_*

முதலிய மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளுக்கு

*_பணம் செலுத்தாமலேயே கட்டணமில்லா மருத்துவ சேவை சிகிச்சை பெற முடியும்,_*

மேலும்
நாம் செலுத்தும் பிரிமியத்திற்கு
*வருமான வரி 80-D_* - பிரிவின் கீழ் ரூ.60000 வரை வருமான வரி விலக்கு பெறலாம்.

*மேலும் விபரங்களுக்கு*
தொடர்பு கொள்ளவும்:

  நன்றியுடன்...

  D.SELVAN
  Chief Advisor

Jun 8, 2017

விதி

விதி என்றால் என்ன.....?
பகுத்தறிவு என்றால் என்ன...?''

குருவிடம் சென்ற சீடன் ஒருவன்,
''விதி என்றால் என்ன?
பகுத்தறிவு என்றால் என்ன?''
என்று வினவினான்.

குரு சீடனைப் பார்த்து, ''உன்
வலது காலைத் தூக்கு!'' என்றார்.
சீடன் வலது காலைத்
தூக்கியபடி நின்றான்.

''சரி. இப்போது நீ தூக்கிய
வலது காலை கீழே இறக்காமல்
இடது காலையும் தூக்கு!'' என்றார் குரு.

''அது எப்படி முடியும்?''
என்று கேட்டான் சீடன்.

அதற்கு குரு, ''இரண்டு காலையும்
தூக்கினால் விழுந்துவிடுவேன் என்று
தூக்காமல் இருந்தாயே...
இதுதான் பகுத்தறிவு.
இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில்
தூக்கி நிற்க முடியாத நிலை இருக்கிறதே...
இது தான் விதி!'' என்று விளக்கம்
சொன்னார்.
🙏�🙏�🙏�🙏�🙏

Jun 6, 2017

தன்னம்பிக்கை கதை"

ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.
அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார்.

அவருடைய பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார்.
அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!’ என்றார் ஜென் துறவி.

‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’

வாழ்க்கை

ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.
அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...
இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....
இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...
வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...
மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...
அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....
அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே...