Powered By Blogger

Jun 9, 2017

சிறுமி கேட்டாள்

*வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..*

  *நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?*

  *அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?*
 
*நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?*

  *ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...*
 
*உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?*

  *என்ன கேள்வி இது..?  நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  "*

*அப்போ ஏம்மா  என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?*
*அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? "* 

*இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!

No comments:

Post a Comment