Powered By Blogger

May 31, 2015

ஆண் என்பவன்

��ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..

��அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..

��வேலை தேடுபவன் அல்ல..
தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

��பணம் தேடுபவன் அல்ல..
தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..

��சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்..

��காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..

��கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக்
கொட்டிவிட்டு வருந்துபவன்.

இந்தியாவின் முதல் பெண்மணிகள் பற்றிய தகவல்கள் சில .....

இந்தியாவின் முதல் பெண்மணிகள் பற்றிய தகவல்கள் சில .....

★ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ·• இந்திரா காந்தி (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ·• பிரதீபா பாடேல்.(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ·• சுசேதா கிருபளானி(அவர்கள்) (உத்திரபிரதேசம்).
★ இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ·• சரோஜினி நாயுடு(அவர்கள்)(உத்திரபிரதேசம்).
★ இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ·• பாத்திமா பீவி. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ·• லட்சுமி பிரானேஷ். (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ·• விஜயலட்சுமி பண்டிட் (அவர்கள்) (ரஷ்யா 1947-49).
★ இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ·• ராஜ்குமாரி அம்ரித்கௌர்(அவர்கள்) (சுகாதாரத்துறை 1957 வரை).
★ இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ·• கார்நிலியா சொராப்ஜி (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ·• ஆனந்தபாய்ஜோஷி(அவர்கள்) (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).
★ இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ·• லலிதா (அவர்கள்) (சிவில்1950).
★ இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ·• அன்னாஜார்ஜ் மல்கோத்ரா (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ·• கிரண்பேடி. (அவர்கள்)
★ உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ·• திருமதி ருக்மணி லெட்சுமிபதி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ·• செல்வி பச்சேந்திரிபால்(அவர்கள்)
★ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் ·• திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்(அவர்கள்)
★ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ·• திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ ·• அருந்ததி ராய்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ·• அன்னா சாண்டி. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் ·•சுவர்ணகுமாரி தேவி(அவர்கள்) (ராம்பூதோதானி பத்திரிக்கை).
★ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் ·• திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (அவர்கள்) (ஆந்திரா)
★ இந்தியாவின் முதல் பெண் விமானி ·• திருமதி சுஷ்மா (அவர்கள்) (ஆந்திரா)
★ இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் ·• திருமதி துர்பா பானர்ஜி (அவர்கள்) (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
★ இந்தியாவின் முதல் பெண் மேயர் ·• தாரா செரியன். (அவர்கள்) (சென்னை )
★ இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் ·• ஹன்சாமேத்தா (அவர்கள்) (பரோடா பல்கலைகழகம்).
★ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் ·• திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி(அவர்கள்)
★ இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி ·• திருமதி கே.பி. சுந்தராம்பாள்(அவர்கள்)
★ ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை ·• செல்வி ஆர்த்தி சாஹா(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி ·• திருமதி லீலா சேத்(அவர்கள்)
★ இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·• திருமதி பீம்லா தேவி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ·• வசந்தகுமாரி (தமிழ்நாடு). (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி ·•கல்பனா சாவ்லா. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் ·•சுரோகா யாதவ். (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) ·•கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல்பெண் ராணுவ கமாண்டன்ட் ·• புனிதா அரோரா.(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் ·• பத்மாவதி பந்தோபாத்யாயா (அவர்கள்)
★ முதல் பெண் சபாநாயக்கர் ·• மீராகுமாரி (அவர்கள்)
★ சட்டம் இயற்றிய முதல் பெண் ·• முத்துலட்சுமி ரெட்டி (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ·• செல்வி விஜயலெட்சுமி (அவர்கள்) (சென்னை)
★ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு ·• திருமதி மரகதவள்ளி டேவிட்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் ·• திருமதி ஆஷா புர்னாதேவி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி ·• செல்வி ரஸியா பேகம்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் ·• திருமதி அனிஸா மிர்சா (அவர்கள்) (ஆமதாபாத்-குஜராத்)
★ இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி ·• திருமதி உஜ்வாலா பாட்டீல்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் ·• செல்வி காதம்பினி கங்குலி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ·• திருமதி கன்வால் வர்மா(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் ·• திருமதி அஞ்சலி ராஜகோபால் (அவர்கள்) (தமிழ் நாடு)
★ இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் ·• திருமதி ஷீலாடோவர்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர்·• திருமதி ஹோமய் வ்யாரவல்லா(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் சிற்பி ·• திருமதி மணி நாராயணி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ·• திருமதி ரஜினி பண்டிட்(அவர்கள்)
★ ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி ·• திருமதி ராணி வேலு நாச்சியார் (அவர்கள்) (மதுரை கோச்சடைப் போர்)
★ இந்தியாவின் திட்டக்கமிஷனின்முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் ·• திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) ·• திருமதி அருணா ஆசஃப் அலி.(அவர்கள்)

ஒரு சின்ன கற்பனை

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில்             86,400.            ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக   வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம்     " உங்கள்கணக்கி
லிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக.            86400.            ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -
"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும்   வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
           நிதர்சனமான உண்மை

ஆம்நம்
ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -
                    காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக
86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது
நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில்86400நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமானஅல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? ������������������������

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக  ஓடிவிடும்.��
சந்தோஷமாகஇருங்கள் -

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - ��

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள
SELVAN
Chief Advisor-LIC

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)

24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

43. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்

44. மிகப் பழமையான அணை – கல்லணை

45. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

46. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

47. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்

2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. நீலகிரி மலை

2. ஆனை மலை

3. பழனி மலை

4. கொடைக்கானல் குன்று

5. குற்றால மலை

6. மகேந்திரகிரி மலை

7. அகத்தியர் மலை

8. ஏலக்காய் மலை

9. சிவகிரி மலை

10. வருஷநாடு மலை

3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. ஜவ்வாது மலை

2. கல்வராயன் மலை

3. சேர்வராயன் மலை

4. பச்சை மலை

5. கொல்லி மலை

6. ஏலகிரி மலை

7. செஞ்சி மலை

8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்

9. பல்லாவரம்

10. வண்டலூர்

4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:

1. ஊட்டி

2. கொடைக்கானல்

3. குன்னுர்

4. கோத்தகிரி

5. ஏற்காடு

6. ஏலகிரி

7. வால்பாறை

5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:

1. தால்காட் கணவாய்

2. போர்காட் கணவாய்

3. பாலக்காட்டுக் கணவாய்

4. செங்கோட்டைக் கணவாய்

5. ஆரல்வாய்க் கணவாய்

6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)

7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)

8. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்

காவேரி – 760 கி.மீ

தென்பெண்ணை – 396 கி.மீ

பாலாறு – 348 கி.மீ

வைகை – 258 கி.மீ

பவானி – 210 கி.மீ

தாமிரபரணி – 130 கி.மீ

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:

குற்றாலம் – திருநெல்வேலி

பாபநாசம் - திருநெல்வேலி

கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி

ஒகேனக்கல் – தருமபுரி

சுருளி – தேனி

திருமூர்த்தி – கோயம்புத்தூர்

கும்பக்கரை – தேனி

10. தமிழகத்தின் முக்கிய நதிக்கரை நகரங்கள்:

மதுரை – வைகை

திருச்சி – காவிரி

ஸ்ரீரங்கம் – கா
விரி மற்றும் கொள்ளிடம்

திருநெல்வேலி – தாமிரபரணி

வேலூர் - பாலாறு

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

கண் குறைபாடுகள், கண்ணாடி
அணிவதிலிருந்து விடுதலை –
அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில்
பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான்
தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால்
மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி
தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை
படிக்கவைத்துப் பார்த்த போது அவனால்
படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது
கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது
கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும்
எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு
கண்களாலும் பார்க்கும் போது இந்த
குறைபாடு தெரியவதில்லை. ஆனால்
பள்ளியிலே கரும்பலகையில் எழுதும்
வரிகளைப் படிக்கும்போது சிரமப்படுகின்றனர்.
ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை.
எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும்
என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண்
மருத்துவமணையில் பரிசோதித்த போது,
நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும்
என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும்
வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித்
தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி
நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக்
கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற
அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு
இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று
கண் கண்ணாடி அணியாமல், பைக்
ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும்
ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை
அடையாளமே தெரியவில்லை…
கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து
கொண்டாயா? அல்லது காண்டாக்ட்
லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்
கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி
அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று
வந்தேன். கடந்த இரண்டு மூன்று
வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை
என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப்
போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக்
கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு
பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு
மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு
எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில்
அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு
ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை.
ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள்.
எனவே மறுநாள் காலை 8 மணிக்கு
வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி
வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற
எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம்
விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை
மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும்
தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும்,
அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே
தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை
எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை,
ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக்
கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம
விடுதியின் தொலைபேசி எண்ணை
கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த,
இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த
அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு
ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு
சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு,
பரிசோதனை ஆகியவற்றை முடித்து,
பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி
நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற
அனைத்து கண் குறைபாடுகளுக்கும்
பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற
போது ஹைதராபாத்திலிருந்து ஒரு
தம்பதியினர் தங்கள் இரண்டு
பெண்குழந்தைகளை அழைத்து
வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த
இரண்டு குழந்தைகளும் கண்ணாடி
அணிந்திருந்தனர். அக்குழந்தைகளின்
தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின்
பேரில் குழந்தைகளை அழைத்து
வந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக,
பல குழந்தைகள், நடுத்தரவயதினர்,
வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது
40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை
பார்க்க முடிந்தது. இதில் பல
வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள்
இப்பயிற்சியை நடத்துகின்றனர்.
காலை 8 மணிமுதல் 10 மணிவரை,
மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள்
ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி
கொடுக்கின்றனர். முறையான
கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை
படிப்பது, இருட்டு அறையில்
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்
சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற
பல பயிற்சிகள்.

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த
ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை
செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல
முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து
ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள்
பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.
கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே
வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி
நடப்பதாகவும், இதுவரை
ஆயிரக்கணக்கானோர்
பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து
கொண்டேன். முன்கூட்டியே பதிவு
செய்து கொண்டு செல்வது நல்லது.
மார்ச் முதல் வாரம் முதல் ஜூன்
முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட
விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம்
வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல
விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு
செய்தால் தான் இடம் கிடைக்கும்.

தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
use/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com

தெரிந்து கொள்வோம்

��தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ஒட்டகப்பால்

��ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

��துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

��பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
��ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

��சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

��ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

��குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

��சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
��சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

��பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

��நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

��நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

��தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

��காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
��மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

��“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

��தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

��இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

��காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

��குளிர் காலத்தில் குயில் கூவாது.

��எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

��லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

��கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

��கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

��யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

��கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

��1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

��ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

��வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

��ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

��பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

��ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

��தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
��சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

��விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

��சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
��யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
��நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
��டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
��புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

��நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.