1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது
3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது
4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது
5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.
6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது
8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது
9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது
11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது
12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்
14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்
15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது
17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது
18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது
19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.
20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது
23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை
29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.
30. கண்கள் திறக்கவில்லையென்றால் சங்கு.
Dec 30, 2016
கண்ணின் மொழி
Dec 26, 2016
* மனதைத் தொட்ட வரிகள் !!!
Ø பணத்திற்காக ஒருவரிடம் பழகாதே. உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.
Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது :)
Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
Dec 25, 2016
தெரியாது...
ஏன் பற்கள் முளைக்கிறது?
மழலைக்குத் தெரியாது.
ஏன் மீசை அரும்புகிறது?
ஆணுக்குத் தெரியாது.
ஏன் பெண்மை பூக்கிறது?
பெண்ணுக்குத் தெரியாது.
ஏன் மரணம் அழைக்கிறது?
முதுமைக்குத் தெரியாது.
மனிதன் ஏன் அழுகிறான்?
கடவுளுக்குத் தெரியாது.
கடவுள் எங்கே இருக்கிறார?
மனிதனுக்குத் தெரியாது...
எல்லாமும் எப்போதும் எல்லோருக்கும் தெரியாது.
இருந்தாலும் வாழ்கின்றோம்....
ஏனென்று தெரியாது...
Dec 24, 2016
அன்பு
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்.
ஏனென்று கேட்டபோது சொன்னாள்:
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...”
அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்:
“அன்பு என்றால் இதுதான்!”
ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...
எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...
நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...
ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்... ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...
Dec 22, 2016
*நான்... நான்... நான்...*
*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!!
*நான்* பெரியவன்,
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அந்த இறைவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*உலகைப்பற்றிக் கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
*நான்... நான்... நான்...*
*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!!
*நான்* பெரியவன்,
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அந்த இறைவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*உலகைப்பற்றிக் கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
Dec 21, 2016
அபூர்வமானவரே
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?
என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.
கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.
அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர ்
சொத்து
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.
எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..
எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..
அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.
கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை
ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...
கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.
பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
ராசியான ஓடு சாமி! மகான்
கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!
கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.
சுரண்டச் சுரண்ட...
அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!
பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!
அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.
இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!
Dec 15, 2016
*மருத்துவக் காப்பீடு* *பெறும்போது* *என்னென்ன விவரங்கள் தேவை?*
*எதிர்பாராத மருத்துவச் செலவுகளை சமாளிக்க, மருத்துவக் காப்பீடு ஒன்றுதான் தீர்வு. ஒரு நேரடி அனுபவத்தைக் கேளுங்களேன்...*
எனக்குத் தெரிந்த ஒருவர், அப்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக இருந்தார். நான் முன்பிருந்த காப்பீட்டு நிறுவனத்தில், அவர் ரூ.10 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு எடுத்து இருந்தார்.
காப்பீடு எடுத்த 46வது நாளில், அவர் மனைவியிடம் இருந்து இரவு 11 மணியளவில் எனக்கு ஃபோன் வந்தது. பதற்றத்துடன் பேசிய அவர், தன் கணவர் மாடியில் இருந்து திடீரென்று மயங்கிக் கீழே விழுந்து விட்டதாகவும், மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் சொன்னார்.
பரிசோதனையில் அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்கு ரூ.8.50 லட்சம் வரை செலவாகும் என்றும் சொன்னார். காப்பீட்டு நிறுவனத்தில் கிளெய்ம் கிடைக்குமா? கிடைக்காவிட்டாலும் தன் நகைகளையும், நிலத்தையும் விற்றாவது கணவரை காப்பாற்ற வேண்டும் என்றும் அந்தப் பெண்மணி சொன்னார்.
இந்த சிகிச்சைக்கு உறுதியாக கிளெய்ம் கிடைக்கும் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், கிளெய்ம் விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு முகவர் நிறுவனத்துக்கு (டிபிஏ) அனுப்பி வைத்தோம்.
அந்த நபரின் சிகிச்சைக்குத் தேவையான முழு கிளெய்ம் தொகையும் கிடைத்தது. சிகிச்சை நல்லபடியாக முடிந்து, இப்போது அவர் நலமுடன் உள்ளார்.
இங்கு நாம் முக்கியமான மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
ஒன்று...மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்ட ஒருவருக்கு, முதல் 30 நாட்கள் வரை எந்த வித சிகிச்சைக்கும் கிளெய்ம் கிடையாது. இரண்டாவது, காப்பீடு எடுத்ததில் இருந்து முதல் 90 நாட்களுக்கு 12 வகையான 'கிரிட்டிகல் இல்னஸ்' பிரச்னைகளுக்கும் கிளெய்ம் கிடையாது. மூன்றாவது, குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு கிளெய்ம் கிடையாது.
இந்த மூன்று நிபந்தனைகளும், அனைத்து மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொதுவானது. அதேநேரம், மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்ட நிமிடம் முதல் விபத்து அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் கிளெய்ம் பெற முடியும்.
பாலிசிதாரர் ஒருவர், மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளும்போது அவருடைய உடல் எடை, உயரம், செய்யும் வேலை, பதவி, பிறந்த தேதி (சான்றிதழ் படி), சரியான முகவரி, பான் அட்டை எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மிகச்சரியாக விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
முக்கியமாக, பிறந்தது முதல் பாலிசி எடுத்துக்கொள்ளும் காலம் வரை அவர் ஏதேனும் சிகிச்சைகள் மேற்கொண்டு இருந்தால், அதையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
*பெண் பாலிசிதாரர்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் குறிப்பிட வேண்டும்.* பாலிசிக்கு முன்பு எடுத்துக்கொண்ட சிகிச்சை விவரங்கள் மறைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் கிளெய்ம் கிடைக்காது. பாலிசியும் ரத்து ஆகிவிடும்.
ஒருவர் குறிப்பிட்ட தொகைக்கு மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும், நடுவில் எப்போது வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு 'டாப் அப்' என்று பெயர். அதிகப்படுத்திய தொகைக்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. 'டாப் அப்' செய்வதற்கு முன்னால் ஏதேனும் சிகிச்சை பெற்றிருந்தால், அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் மீண்டும் கிளெய்ம் பெற இயலாது.
Dec 14, 2016
மரத்தின் கதையல்ல
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.
திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.
கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....
மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.
வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.
அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.
அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.
அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்.....
நன்றி....