Powered By Blogger

Mar 24, 2016

இந்தியாவில் அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டும்: உலக வங்கி கணிப்ப

புதுடெல்லி, மார்ச் 24- இந்தியாவில், அடுத்த நிதி ஆண்டில் (2016-17) தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி ஆய்வறிக்கை கூறுவதாவது:- இந்தியாவில், அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்ட உள்ளது. 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் (1,500 டாலர்) என்பது பெரிய தொகையாகும். இது முதல் முறையாக 6 இலக்கம் என்ற சாதனை அளவை தொட இருக்கிறது. கடந்த 2012-13-ஆம் நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 12.40 சதவீதத்தினருக்கு தினசரி வருமானம் 1 டாலருக்கும் குறைவாகவே இருந்தது. நடப்பு 2015-16-ஆம் நிதி ஆண்டில், நடப்பு விலை அடிப்படையில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.93,231-ஆக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டில் அது ரூ.86,879-ஆக இருந்தது. ஆக, தனிநபர் வருமானம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2012-13 மற்றும் 2013-14 நிதி ஆண்டுகளில் அது முறையே ரூ.71,050 மற்றும் ரூ.79,412-ஆக இருந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலும், 1.2 சதவீத மக்கள்தொகை பெருக்கம் என்ற கணக்கீட்டின்படியும் அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.1 லட்சத்திற்கும் (1,500 டாலர்) அதிகமாக இருக்கும். சர்வதேச அளவில், 2014-ஆம் ஆண்டில், தனிநபர் வருமானம் 1,586 டாலராக இருந்தது. இந்தோனேஷியாவில் அது 3,492 டாலராக இருந்தது. சீனாவில் 7,590 டாலராகவும், அமெரிக்காவில் 54,630 டாலராகவும் இருந்தது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Mar 14, 2016

குரட்டைக்கு குட்பாய்...!

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

Enjoy..... relax.

நல்ல வேளை இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால் மனிதன் அதையும் மூன்றாவது தெருவில் பிச்சையெடுக்க விட்டிருப்பான்

போராளிகளின் மனதிலும் பல கோமாளிகளின் டி-ஷர்ட்களிலும் உயிர் வாழ்கிறார்! # சே குவேரா

நேரத்தை சேமிக்க வந்ததாக நினைக்கும்
கைப்பேசியும் இணையமும் தான் அதிக நேரத்தை தின்கின்றன !

என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாக இருக்கிறது # ஆபீஸ்

ஃபேஸ்புக் கம்பெனியின் வெற்றிக்கு காரணம், அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை

பெரும்பாலான காதல் ஆரம்பிப்பது இளையராஜா பாட்டில். ஆனால் முடிவோ மல்லையா ‘பாட்டில்’!

இரகசியத்தை ஊமைப் பெண்ணிடம் சொல்லுங்கள்; அவளும் பேசத் தொடங்கிவிடுவாள்… -சீனப் பழமொழி

உலகிலேயே படு பயங்கரமான பொய், “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?”

எத்தனை வயது ஆனாலும் அப்பா நம்முடன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை மனம் உணரவே செய்கிறது

லிஃப்ட் பட்டன நாலஞ்சு தடவ அமுக்கினா லிஃப்ட் வேகமா வரும்னு நம்புது ஒரு கூட்டம்

அரிச்சந்திரனோட நேர்மையை பரிசோதிக்க, அவரை காங்கிரஸ்-லயோ திமுக-விலேயோ சேர்த்து விட்ருக்கலாம்

Mar 5, 2016

''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே! 

இன்று ஒரு தகவல்

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.

அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.

மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.

இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். 

வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி...
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. 

வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.

அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பி இருப்பார்கள்'' என்று கண்டுபிடித்திருப்பீர்களே...!''என்று எழுதியிருந்ததைப் பார்த்த உடன் கத்தினர்.
ஐயோ...! ''களவாணிப்பயலா'' அவன்....? என்று....

நீதி: 

''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே! 

உலகில் எதுவும் இலவசம் இல்லை. காற்றை தவிர, மரம் இருக்கும் வரை!!

உங்கள் வங்கி இலவச ஆலோசனை கொடுப்பதிர்கான  காரணமும் இதுதான்.  

உஷார் உஷார் உஷார்

Who will cry when you die?"

நான் படித்ததில் பிடித்தது....

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

GUARANTEED monthly PENSION LIFETIME

ONLY PLAN in the world that gives FIXED and GUARANTEED  monthly PENSION  LIFETIME is

LIC'S - Jeevan Akshay

1990 - RBI int 14% LIC - 12%: LIFETIME - continue even today

1995 - RBI 13% - LIC 12% LIFETIME so continue even today

2000 - RBI 12% - LIC 10% LIFETIME so continue even today

2005 - RBI 10% - LIC 9% LIFETIME so continue even today

2015 - RBI 8% -: LIC -pension plan  7•5%  LIFETIME - would be better placed in 2020 when RBI rate would be - 5% or less.

Invest in LIC'S pension plan TODAY and get ASSURED income for self and spouse, LIFETIME.                                        

மன அழுத்தம் இன்றி  வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்.!

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரியஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டியபணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தைஅதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல்செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம்வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்யமுயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும்.இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்துநிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம்வேண்டாம்

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பதுபோன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும்அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும்இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம்செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மனஇறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவுஅவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துதூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காகஅடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாதபொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை,தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல்நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப்பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடுசெய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும்முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ளமுயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கைமிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டஉண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளிவிடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வதுஎன மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள்செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமானவேலைகள் மனதைஇலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.����

Union Budget 2016 Highlights

Union Budget 2016 Highlights:

No Change in Personal Taxation Slab

High Income Individuals to pay enhanced surcharge of 15% in case income > 1.00 crore

Relief u/s 87A increased from 2000 to 5000

Deductions u/s 80GG increased from 24000 to 60000

Limit for 44AD  increased from 1.00 Crore to 2.00 Crore
(Consequently limit u/s 44AB also increased to 2.00 for business and 50.00 lac for professionals)

Limit for 44AD (Professional) now applicable upto 50.00 lac with presumptive rate of income at 50%

Small Corporate Tax Payers to pay @ 29%

No Service tax on Services provided under DeenDyal Upadhyay Kaushal Yozna

100% Exemption from Profits earned from specified Housing Projects, subject to provisions of section 115JC

Tax on dividends in excess of 10.00 lac for Individuals/HUF

Scope of TCS expanded

Vehicle costing more than 10.00 lac to pay 1% additional tax

Infra Cess on Vehicles levied

Excise Duty of 1% on jewellary without input credit tax

Excise duty on tobacco products increased

Another Voluntary Disclosure scheme launched to reduce litigation

Pending litigation also being rationalised

Section 271(1)(c) modified to levy of graded penalty

Section 14A amended

Waiver of Interest and penalty petitions to be decided in one year

11 New benches of Indirect Taxes Tribunals

TDS Provisons rationalised

NRI not be taxed at higher rate on production of specified documents

E-assessments in seven mega cities.

e-Sahyog to be expanded

Enhanced interest on delayed refunds arising out of Appeal effect at 9%. AO to be made responsible for addittional interest.

Union Budget 2016 Highlights.
1. Rs. 35984 crores allotted for agriculture sector.
2. Rs. 17000 crores for irrigation projects.
3. Two new Organic farming scheme for 5 lakh acres.
4. Rs. 19000 crores for Gram Sadak Yojana
5. Rs. 9 Lakh Crores Agriculture Credit Target.
6. Rs. 38500 crores for MANREGA, highest ever.
7. Rs. 2.87 Lakh crores to be spent on Villages in total.
8. Rs. 9000 crores for Swach Bharat Mission.
9. Rs. 97000 Crores for Roads.
10. Total Outlay on Roads and railway Rs. 2.18 Lk Crores.
11. Rs. 2.21 Lakh Crores on Infra Projects.
12. NHAI to raise Rs. 15000 crores via NHAI Bonds.
13. More benches for SEBI Appellate tribunal.
14. Registration of Company in One Day for Start-ups.
15. Rs. 25000 crores for Banks rehabilitation.
16. 100% FDI for food processing.
17. Non planned expenditure of Rs. 14.28 Lk Crores.
18. Planned expenditure increased by 15.3% .
19. Relief Section 87A Rs. 2000 to Rs. 5000
20. Relief Sec 80GG Rs. 24000 to Rs. 60000
21. Section 44AD limits Rs. 1 crores to Rs. 2 crores. Rs. 50 Lakh for professional
22. Accelerated depreciation limited to 40%
23. New manufacturing companies will pay tax @ 25%.
24. LTCG on unlisted securities limited to 2 years.
25. 100% tax deduction for companies building houses upto 30 sq. mtrs.
26. Additional interest deduction for first house.
27. No service tax for building houses upto 60 sq mtrs.
28. 10% dividend tax for recipient over Rs. 10 lakh per annum.
29. TCS on purchase of asset over Rs. 2 Lakh in case and luxury cars.
30. VDS Scheme @ 30% + surcharge, Ist June to 30th September 2016.
31. Dispute resolution for appeal pending before Commissioner(Appeals).
32. Penalty for concealment of Income from 100-300% to 50-200%.
33. Rationalisation of TDS provisions.
34. 11 new benches for Income Tax Appellate tribunal.
35. No face to face scrutiny.

Out of many Budget highlights..service tax increased from 14.5 % to 15 %..will effect almost everything v buy in our day to day life..hotel bills to be heavier than before..
Also diesel vehicles to get costlier

Health, Motor premium to go down: Service tax to be exempted on premium of general insurance policies. That means, health and motor insurance policies to get cheaper.

The Power of Positive Thinking”

"நார்மன் வின்சென்ட் பீலே" என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் “The Power of Positive Thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்.

தோல்வி மேல் தோல்வி அடைந்து
விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது
பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும், கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று
புலம்பிக் கொண்டு அந்த துண்டு
காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை
வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலேசில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் "எனது மகன் ஜெயிலுக்கேபோகவில்லையே" என்று கூறினார்.

“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி
உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு "சாப்பிடாமல் நான்
இருந்த்தில்லை" என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து
சென்றபோது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு "என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது" என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப்புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும்
இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க
மகிழ்ச்சியான நிகழ்வுகளைக்
கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும்
இல்லை.

அதுபோல முழுக்க முழுக்க
துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்த்து தான் வாழ்க்கை.

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளைமட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய
வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்.

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது.

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளுபலகையாக இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் வாழ்க்கையை
மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று
முடிவெடுங்கள்.

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்.

மகிழ்ச்சியாய் எழுதத் தொடங்குங்கள்.

வலது பக்கம் நிரம்பட்டும்..!!

இடது பக்கம்
காலியாகட்டும்..!!