Powered By Blogger

Apr 27, 2017

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா*    D.SELVAN
CHIEF ADVISOR-LIC OFINDIA

Apr 25, 2017

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!  AAA.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!  AAA.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

*வாழ்க்கை வரலாறுகள்*

📚📓📚📓📚📓📚📓📚📓📚

*வாழ்க்கை வரலாறுகள்*
*(தமிழ் PDF மின்நூல்கள்)📕*

1. முஹம்மது நபி ⬇
http://fahim.link/ProphetMuhammad

2. சே குவேரா ⬇
http://fahim.link/CheGuwera

3. தாமஸ் ஆல்வா எடிசன் ⬇
http://fahim.link/ThomasEdison

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ⬇
http://fahim.link/AlbertEinstein

5. பிரபாகரன் ⬇
http://fahim.link/Prabakaran

6. மாவீரன் அலெக்சாண்டர் ⬇
http://fahim.link/Alexander

7. மருதநாயகம் ⬇
http://fahim.link/Marudhanayagam

8. ராமானுஜம் ⬇
http://fahim.link/Ramanujam

9. சுனிதா வில்லியம்ஸ் ⬇
http://fahim.link/SunithaWilliams

10. சதாம் ஹுசைன் ⬇
http://fahim.link/SadhamHussain

11. அறிஞர் அண்ணா ⬇
http://fahim.link/ArignarAnna

12. பெரியார் ⬇
http://fahim.link/Periyar

13. திப்பு சுல்தான் ⬇
http://fahim.link/ThippuSulthan

14. நெப்போலியன் ⬇
http://fahim.link/Nepolien

15. கேனல் கடாபி ⬇
http://fahim.link/Gadafi

16. ஹிட்லர் ⬇
http://fahim.link/Hitler

17. காமராஜர் ⬇
http://fahim.link/Kamarajar

18. கார்ல் மாக்ஸ் ⬇
http://fahim.link/KarlMarks

19. பில் கேட்ஸ் ⬇
http://fahim.link/BillGates

20. பாரதியார் ⬇
http://fahim.link/Bharathiyar

21. பிடல் காஸ்ட்ரோ ⬇
http://fahim.link/FidalCastro

22. ஹெலன் கெல்லர் ⬇
http://fahim.link/HelanKeller

Apr 24, 2017

கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....

நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...

திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,

இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...

சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....

இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......

அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...

மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....

பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....

இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......

அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....

என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......

அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?....

இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....

திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......

அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....

ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....

இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...

Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....

அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....

பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......

அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....

அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....

உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...

நம்பிக்கைதான்

துளையிட்ட காசு
==============
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான்.

ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடு­வேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, ­ அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான்.

சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் ­ போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்.

அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது ­. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ ­ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!

பல்லிகள் ஓட்டப் பந்தயம்

ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஓட்டப் பந்தயம் நடத்தின. யார் முதலில் டவரின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின. கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது, இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.

“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டன.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. “உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது”

ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின. “தற்கொலை முயற்சிடா தருதலை”

எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.

எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது. அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது. “அவனுக்கு காது கேட்காது”

வெற்றியை எட்ட நினைப்பவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.

                -மகிழ்ச்சி

Apr 18, 2017

வரி எவ்வளவு?

*பழைய வீட்டை விற்றால் வரி எவ்வளவு?*
ஒரு சொத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு தொகைக்கு வாங்கி, அதை இப்போது விற்கும்போது, குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் அல்லவா? அந்த லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வரிக்கு மூலதன லாப வரி என்று பெயர். அதென்ன மூலதன லாப வரி? அந்த வரியை எப்படிக் கணக்கிடுவது?

ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கான வரியே மூலதன வரி. இந்த வரியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, நீண்டகால மூலதன வரி. இரண்டாவது, குறுகிய கால மூலதன வரி.

*நீண்ட கால மூலதன வரி*

உதாரணத்துக்கு ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை, இப்போது விற்கிறார் என வைத்துக்கொள்வோம். அதிலிருந்து கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன லாபம் என்று பெயர். இந்தத் தொகைக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

*குறுகிய கால மூலதன வரி*

ஒருவர் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் வாங்கிய ஒரு வீட்டை, இப்போது விற்கும்போது, கிடைக்கும் லாபத்துக்கு குறுகிய கால மூலதன லாபம் என்று பெயர். நீண்ட கால மூலதன லாபத்துக்கு உள்ள வரியைப் போல் அல்லாமல், வருமான வரி செலுத்தும் அளவிலேயே வரியைச் செலுத்த வேண்டும். இது சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அதெல்லாம் சரி, வீட்டை விற்பதன் மூலம் கிடைத்த லாபத்தை எப்படிக் கணக்கிடுவது?

*லாபம் கணக்கீடு*

வழக்கமாக லாபத்தை எப்படிக் கணக்கிடுவோம்? வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால் வரும் மீதமே லாபம் அல்லவா? ஆனால், நீண்டகால மூலதன லாபம் இந்த முறையில் கணக்கிடப்படாது. இதற்கு இண்டக்ஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. அப்படியனால், இண்டக்ஸ் முறை என்றால் என்ன? இந்த இண்டக்ஸ் குறியீடு அட்டவணை பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பண வீக்கம் உயர்ந்தால் விலை உயரும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டே இண்டக்ஸ் குறியீடு தயாரிக்கப்படுகிறது.

இண்டக்ஸ் முறை இப்போது அமல்படுத்தப்பட்டதல்ல. 1981-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 1981-82 நிதியாண்டில் இந்த இண்டக்ஸ் குறியீடானது 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1982-83 நிதியாண்டில் இண்டக்ஸ் 109 புள்ளிகளாக உயர்ந்தது. அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்சமயம், அதாவது 2016- 17-ம் நிதியாண்டில் இண்டக்ஸ் 1125 உயர்ந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் சுமார் 12 மடங்கு அளவுக்கு இண்டக்ஸ் உயர்ந்துள்ளது.

*லாபம் எவ்வளவு?*

சரி, இப்போது நாம் லாப கணக்குக்கு வருவோம். உதாரணத்துக்கு நீங்கள் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீடு வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது அதன் விலை ரூ. 3 லட்சம். இப்போது அதை ரூ. 30 லட்சத்துக்கு விற்கிறீர்கள் எனக் கொள்வோம். அவருக்குக் கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபம் எவ்வளவு இருக்கும்? 30 லட்சத்திலிருந்து 3 லட்சத்தைக் கழித்து 27 லட்சம் ரூபாய் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அதற்கு ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்துவிடுவோம்.

1990-ல் இண்டக்ஸ் புள்ளிகள் 182.

வாங்கிய விலை ரூ. 3 லட்சம்.

தற்போதைய இண்டக்ஸ் புள்ளிகள் 1125.

விற்ற விலை ரூ. 30 லட்சம்.

கிடைக்கக்கூடிய லாபம்

ரூ.3,00,000 * 1125 / 182 = ரூ.18,54,395

பணவீக்கத்தின் அடிப்படையிலான வீட்டின் விலை = ரூ.18,54,395

அப்படியானால், நீண்ட கால மூலதன லாபம் = 30,00,000 - 18,54,395 = ரூ.11,45,605

1990-ம் ஆண்டு வாங்கி, இப்போது விற்ற வீட்டின் மூலம் உங்களுக்குக் கிடைத்த லாபம் ரூ.11,45,605. இந்தத் தொகைக்குத்தான் நீங்கள் வரி செலுத்த வேண்டும். இந்த வரியைச் செலுத்தாமல் இருக்க ஒரு வழி உள்ளது. பழைய வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்தைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள், ஒரு புதிய வீடு வாங்கினால், அந்த மூலதனத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. உதாரணமாக உங்களுக்கு ரூ.25 லட்சம் நீண்டகால மூலதன லாபமாகக் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொகையில் ரூ.22 லட்சத்துக்குப் புதிய வீடு வாங்குகிறீர்கள். அப்படியானால் மீதமுள்ள 3 லட்சத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது. இதில் ஒரு நிபந்தனை உள்ளது. அப்படி வாங்கிய புதிய வீட்டை 3 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது. அதுதான் அந்த நிபந்தனை.

ஒரு வேளை வீடு வாங்க விரும்பவில்லையெனில், குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் அதை முதலீடாகச் செலுத்தினால் வரி செலுத்த வேண்டியதில்லை. இதிலும் ஒரு நிபந்தனை உள்ளது. அது என்னவென்றால், அந்த முதலீட்டுத் திட்டம் 3 ஆண்டுகளுக்கானதாக இருக்க வேண்டும்.