Powered By Blogger

Apr 24, 2017

பல்லிகள் ஓட்டப் பந்தயம்

ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஓட்டப் பந்தயம் நடத்தின. யார் முதலில் டவரின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின. கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது, இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.

“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டன.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. “உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது”

ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின. “தற்கொலை முயற்சிடா தருதலை”

எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.

எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது. அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது. “அவனுக்கு காது கேட்காது”

வெற்றியை எட்ட நினைப்பவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.

                -மகிழ்ச்சி

No comments:

Post a Comment