Powered By Blogger

Apr 11, 2017

அன்பு - உலகை - ஆளும்

*ஒரு குட்டி கதை* - 🔐🔨

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது.
"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?"
அதற்கு சாவி சொன்னது. "நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்" என்றதாம்.

No comments:

Post a Comment