Powered By Blogger

Aug 10, 2016

தங்கையே

தங்கையே,
ஒரு முறையேனும் உன் பாதம் தொட்டு செல்லும் வரம் கிடைக்க வீதியெங்கும் தேங்கியிருக்கிறது "மழை நீர்".

===================================================

கண்டிப்பு காட்டி அப்பா அடித்து விடுகையில்,
"வா அண்ணா"
சாப்பிட என்று பாசம் காட்டி அழைக்கும் தங்கைகள் கிடைப்பது வாழ்க்கையின் வரம்...!

===================================================

பெரும்பாலும் தங்கையின் திருமணத்தை பொறுத்தே அண்ணனின் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது..

===================================================

தங்கைக்கு
இன்னொரு
தாய் தந்தையாக
இருப்பது
அண்ணன்கள்
மட்டுமே.

==================================================

கர்ப்பம் தரிக்கவில்லை,
குழந்தையும் சுமக்கவில்லை,
ஆனாலும் தாயாக வாழ்கிறேன்
என் தங்கையை கையில்
சுமந்த காலம் முதல்...

==================================================

அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்...

==================================================

தந்தையை இழந்த மகள்களுக்கு பெரும்பாலும் அண்ணன்களே தந்தையாக இருக்கின்றனர்....

==================================================

பத்து மாதம் சுமக்கவில்லை,
ஆனால்,
உன்னிடத்தில் பார்க்கிறேன்
தாயின் மறு உருவம்
தங்கச்சி...

==================================================

தங்கையே,
சிறுவயதில் நாம் சண்டையிட்ட தருணங்களை நினைக்கும் போதெல்லாம்,
முட்டாள் போல் சிரிக்கிறேன் மீண்டும் அந்நாள் வருமா?

==================================================

தங்கையே,
நீ என் மனைவியிடம் சண்டை போடும், பேரழகை ரசிப்பதற்காகவே ஒரு முறையேனும் திருமணம் செய்து கொள்ள ஆசை எனக்கு.

==================================================

அம்மாவிற்கும், மனைவிக்குமிடையே சண்டை வரும் போதெல்லாம், பெரும்பாலும் மனைவி பக்கம் இருக்கும் ஆண்கள்,

மனைவிக்கும், தங்கைக்குமிடையே சண்டை வரும் போதெல்லாம்,
முழுவதும் தங்கை பக்கமே இருக்கிறார்கள் ஆண்கள்

=================================================

ஒரு முறையேனும் காதலித்து தோற்கும் வரம் வேண்டும்,
தங்கை ஆறுதல் சொல்ல...

================================================

வாழ்க்கை பயணங்களில் தங்கைகளின் ஜன்னலோர இருக்கைகள்,
அண்ணன்களே.

================================================

அம்மா, அப்பாக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை,
அறிந்தவர்கள் தங்கைகள்..

Aug 2, 2016

அம்மா! அம்மா!

✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா
சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடா
கண்ணா!
✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்.
✏ தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம்
செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை. அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை.
✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.
✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.
✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.
✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!
✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.
✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'.
✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்.
✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்.
✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!
✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.
நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு.
✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?
✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.
✏ ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்
போனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.
✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.
✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!
✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!
✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை.
என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை.
✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.
✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை.
✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!
✏ 'அம்மா...!' அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்.!💐

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.
ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...
உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில்உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...
சிந்திப்பீர் மனிதர்களே!!!