Powered By Blogger

Aug 10, 2016

தங்கையே

தங்கையே,
ஒரு முறையேனும் உன் பாதம் தொட்டு செல்லும் வரம் கிடைக்க வீதியெங்கும் தேங்கியிருக்கிறது "மழை நீர்".

===================================================

கண்டிப்பு காட்டி அப்பா அடித்து விடுகையில்,
"வா அண்ணா"
சாப்பிட என்று பாசம் காட்டி அழைக்கும் தங்கைகள் கிடைப்பது வாழ்க்கையின் வரம்...!

===================================================

பெரும்பாலும் தங்கையின் திருமணத்தை பொறுத்தே அண்ணனின் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது..

===================================================

தங்கைக்கு
இன்னொரு
தாய் தந்தையாக
இருப்பது
அண்ணன்கள்
மட்டுமே.

==================================================

கர்ப்பம் தரிக்கவில்லை,
குழந்தையும் சுமக்கவில்லை,
ஆனாலும் தாயாக வாழ்கிறேன்
என் தங்கையை கையில்
சுமந்த காலம் முதல்...

==================================================

அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்...

==================================================

தந்தையை இழந்த மகள்களுக்கு பெரும்பாலும் அண்ணன்களே தந்தையாக இருக்கின்றனர்....

==================================================

பத்து மாதம் சுமக்கவில்லை,
ஆனால்,
உன்னிடத்தில் பார்க்கிறேன்
தாயின் மறு உருவம்
தங்கச்சி...

==================================================

தங்கையே,
சிறுவயதில் நாம் சண்டையிட்ட தருணங்களை நினைக்கும் போதெல்லாம்,
முட்டாள் போல் சிரிக்கிறேன் மீண்டும் அந்நாள் வருமா?

==================================================

தங்கையே,
நீ என் மனைவியிடம் சண்டை போடும், பேரழகை ரசிப்பதற்காகவே ஒரு முறையேனும் திருமணம் செய்து கொள்ள ஆசை எனக்கு.

==================================================

அம்மாவிற்கும், மனைவிக்குமிடையே சண்டை வரும் போதெல்லாம், பெரும்பாலும் மனைவி பக்கம் இருக்கும் ஆண்கள்,

மனைவிக்கும், தங்கைக்குமிடையே சண்டை வரும் போதெல்லாம்,
முழுவதும் தங்கை பக்கமே இருக்கிறார்கள் ஆண்கள்

=================================================

ஒரு முறையேனும் காதலித்து தோற்கும் வரம் வேண்டும்,
தங்கை ஆறுதல் சொல்ல...

================================================

வாழ்க்கை பயணங்களில் தங்கைகளின் ஜன்னலோர இருக்கைகள்,
அண்ணன்களே.

================================================

அம்மா, அப்பாக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை,
அறிந்தவர்கள் தங்கைகள்..

No comments:

Post a Comment