♥உறவாலே உலகம் என்றும் தொடர்கிறது
பகையாலே அவைகள் என்றும் அழிகின்றது!
♥ஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,
சுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே!
♥நல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,
மன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை!
♥நல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,
விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை !
♥உறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.
இரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.!
♥உலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,
உலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் !
♥உறவாலே தொடர்வதும் மனித இனமே ,
பிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே!
♥ஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,
கண்ணின் இமையென கணவனை காத்து நிற்பாள்!
♥ஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,
அன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே !
♥குடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,
அன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே !
No comments:
Post a Comment