Powered By Blogger

Apr 11, 2017

உறவுகள்

♥உறவாலே உலகம்  என்றும்  தொடர்கிறது
பகையாலே அவைகள் என்றும் அழிகின்றது!

♥ஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,
சுயநலங்கள்  எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே!

♥நல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,
மன்னிப்பு  கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை!

♥நல்லதையும், நன்மையே  செய்தாலும் பலர் நினைப்பதில்லை,
விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும்  கெடுவதில்லை !

♥உறவு என்னும்  சொல்லிருந்தால்  பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.
இரவு  என்னும்     சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.!

♥உலகில் பிரிகமுடியாதது   பந்தமும் பாசமும்,
உலகில் ஒதுக்க முடியாதது  நட்பும்,  உறவும் !

♥உறவாலே தொடர்வதும்  மனித இனமே ,
பிரிவாலே  பாழ்படுவதும்  மனித இனமே!

♥ஆலம் விழுதினைப் போல் மனைவி  தாங்கி நிற்பாள்,
கண்ணின்  இமையென கணவனை  காத்து  நிற்பாள்!

♥ஆயிரம் உறவுகள்  உலகில்  இருந்திடுமே,
அன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே !

♥குடும்பத்தின்  ஆணிவேராய்  இருப்போர்  தாய்   தந் தைதானே, 
அன்பு,  பாசம்   இவையெல்லாம்   உறவின் எல்லைதானே !

No comments:

Post a Comment