ஏன் பற்கள் முளைக்கிறது?
மழலைக்குத் தெரியாது.
ஏன் மீசை அரும்புகிறது?
ஆணுக்குத் தெரியாது.
ஏன் பெண்மை பூக்கிறது?
பெண்ணுக்குத் தெரியாது.
ஏன் மரணம் அழைக்கிறது?
முதுமைக்குத் தெரியாது.
மனிதன் ஏன் அழுகிறான்?
கடவுளுக்குத் தெரியாது.
கடவுள் எங்கே இருக்கிறார?
மனிதனுக்குத் தெரியாது...
எல்லாமும் எப்போதும் எல்லோருக்கும் தெரியாது.
இருந்தாலும் வாழ்கின்றோம்....
ஏனென்று தெரியாது...
No comments:
Post a Comment