Powered By Blogger

Dec 6, 2016

டிசம்பர் -6

டிசம்பர் -6

ஆண்டு -2016

மாலை-6.06

புதைக்கப்பட்டது ஒரு சகாப்தம்..!!

#அனைவர் கண்ணிலும் கண்ணீர் 6 ஆய்.!

*7 தமிழக முதல்வரின் இறுதி சடங்கை கண்ட கருணாநிதி*

*1*- *ராஜாஜி*

*2*- *அன்னாதுரை*

*3*- *காமராஜர்*

*4*- *எம்.ஜி.ஆர்*

*5*- *ஜானகி ராமச்சந்திரன்*

*6*- *நெடுஞ்செழியன்*

*7*- *ஜெ.ஜெயலலிதா*

விடை பெறுகிறேன் என் இனிய தமிழ் மக்களே, இரத்தத்தின் இரத்தங்களே.
மீண்டு வர முடியாத இடத்திற்கு செல்கிறேன்.
என் வாழ்வில் தான் எத்தனை எதிரிகள்,
எத்தனை துரோகிகள்,எத்தனை வழக்குகள்.
அனைத்தையும் ஜெயித்த என்னால் எமனை வெல்ல முடியவில்லை.
ஜெய் ஹிந்த்.

💔💔💔💔💔💔💔💔💔
போயஸ் தோட்டத்து
பொன் புறா
பறக்கக மறந்து போனது.
💔💔💔💔💔💔💔💔💔
வேதா இல்லத்து
திருவிளக்கு
அணைந்து போனது
💔💔💔💔💔💔💔💔💔
ஒரு தைரியக் குதிரை
தைரியமாக
மரணித்துவிட்டது
💔💔💔💔💔💔💔💔💔
ஆட்சியிலும்
ஆட்சியில்லா
காட்சியிலும்
சாட்சியாய் நின்றாலும்
என்றுமே இராணி நீங்கள்
💔💔💔💔💔💔💔💔💔
எதிலும் சமரசம்
கொள்ளாதா
நீங்கள்
மரணத்துடன் மட்டும் எப்படி
💔💔💔💔💔💔💔💔💔
கடைசிவரை
இதுவும்
வதந்தியாகக்கூடாதா.
💔💔💔💔💔💔💔💔💔
யாருமே நெருங்க
முடியாத நீங்கள்
மக்கள் மனதில்
மட்டும் எளிதாய்
💔💔💔💔💔💔💔💔💔
உம்வாழ்வே
போராட்டம்தான்
கடைசியில்
காலனுடன்
💔💔💔💔💔💔💔💔💔
இரத்த உறவை
நீங்கள் அனுமதிக்கவில்லை
இரத்தத்தின் இரத்தமான
அன்பு உடன்பிறப்புகளுக்காக
💔💔💔💔💔💔💔💔💔
எல்லோருக்கும்
உண்டு இந்த நாள் ஒன்று
அது உங்களுக்கு இன்று
எங்களுக்கோ இனி வரும்
நாட்களெல்லாம்
💔💔💔💔💔💔💔💔💔
உமது தைரியத்தை
மரணம் மட்டுமே
தைரியமாக
நெருங்கியிருக்கிறது
💔💔💔💔💔💔💔💔💔
விண்ணில்
உங்கள் அசரீரி
ஒலிக்கிறது
நான் மரணித்துவிட்டேன் என்று...
💔💔💔💔💔💔💔💔💔
மாசியில் பிறந்தாய்
மக்களை ஆண்டாய்
சிம்ம ராசிகொண்டு
சிங்கமென நடந்தாய்
💔💔💔💔💔💔💔💔💔
பெண்ணாக
பிறந்த ஆண் நீங்கள்
💔💔💔💔💔💔💔💔💔உங்களுக்கென்று
உறவென்று
யாருமில்லை
உம் தொண்டர்களுக்கும்
உம்மைவிட்டால்
யாருமில்லையே
💔💔💔💔💔💔💔💔💔
பிள்ளைகள் அழுதால்
அம்மாதான்
ஆறுதல் சொல்வாள்
அம்மாவே அழவைத்தால்
யார் ஆறுதல் சொல்வது.
💔💔💔💔💔💔💔💔💔
ஆறு மொழி
அறிந்தவரே
ஒரே ஒரு வார்த்தை
பேசுங்கள் போதும்
💔💔💔💔💔💔💔💔உங்கள் நெற்றியில்
நீண்ட கோடு ஒன்று
அதன் கீழே
ஒரு புள்ளியாய்
ஒரு பொட்டு
சொல்லாமல் சொல்லும்
நீங்கள் என்றுமே
ஒரு ஆச்சர்யக்குறி! ! !
💔💔💔💔💔💔💔💔💔
     அஞ்சலி-அம்மாவுக்கு.
                 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment