Powered By Blogger

May 22, 2015

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை
கடவுள்: கழுதையைப்படைத்து அதனிடம் சொன்னார். "நீகழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்சொன்னார். "நீ மனிதனின்வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்லநண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்சொன்னார். "நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
குரங்கு: எனக்கு 10வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். "நீ✨✨சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
மனிதன்: "சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாமென்று சொன்ன 30 ⌛வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
* அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்மனிதனாகவும், * பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்போல குடும்பப் பாரம் சுமந்தும்,* குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,* கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!

No comments:

Post a Comment