ஒரு முத்து என்பது
சிப்பியின் 12 ஆண்டு
தவம்.!
துளித்துளியாய் ஒளிர்!
ஒரேயடியாக வந்த வெள்ளம் வற்றிவிடும்.!
பணிவாய் இருப்பதைவிடக்
கனிவாய் இருப்பது நலம்.!
எரிந்து விழாதே
அப்படி விழுவது
சாம்பலான
கூரைகள் மட்டுமே!
கடவுள் உனக்கு
முகவரிகளைத்தான்
தருவார்.
நீதான் போய்
தட்ட வேண்டும்.!
உதவி கேள்
கெஞ்சாதே!
உதவி செய்
உறிஞ்சாதே.!
நோகாத நெல் உமியாகிறது!
அடிக்க அடிக்க உதிரும்
நெல் அன்னமாகிறது.!
அடிபட்டு அடிபட்டு
வடிவம் பெற்ற எதுவுமே
வணங்கப்படும்!
உதாரணம்
கடவுள் சிலை.
No comments:
Post a Comment