பரபரப்பாக இயங்கும் உலகமிது.
இதில் யாருக்கு எப்போது எப்படி பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை
தலைகீழாக மாறிவிடும்.
அதாவது, உயிரிழப்பு அல்லது உடல்பாதிப்பினால் குடும்பத் தலைவர் மூலம் குடும்பத்திற்கு கிடைக்கும் வருமானம் தடைபடும். குடும்பத் தலைவர் ஏற்கெனவே கடன்
வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கட்டவேண்டிய கட்டாயம் அந்தக் குடும்பத்தினரின் மேல்
விழுந்து, மேலும் கடன்
வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இப்படி ஒரே
சமயத்தில் பணநெருக்கடியும், மனநெருக்கடியும் ஏற்பட்டு அந்தக் குடும்பத்தினரின் வாழ்க்கையே நரகமாக மாறிவிடும். எனவே,
இதுபோன்ற சூழ்நிலையில் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது இன்ஷூரன்ஸ் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.
எனவே,
ஒவ்வொரு தனி
மனிதனும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன? இவை
எந்த
வகையில் வாழ்க்கைக்கு உதவும் என்பது குறித்து விளக்குகிறார் நிதி
ஆலோசகர் வி.சங்கர்.
லைஃப் இன்ஷூரன்ஸ்!
திருமணமானவர்கள் அவசியம் எடுக்கவேண்டிய பாலிசி இது.
இதற்காக திருமணமாகாதவர்களுக்கு இந்த
பாலிசி தேவையில்லை என்பதல்ல அர்த்தம். தனிநபரைச் சார்ந்து பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் இருந்தால் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பாலிசி, முழு
ஆயுள் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, சைல்டு ப்ளான் பாலிசி என
பலவகைகள் உள்ளன. இதில் டேர்ம் இன்ஷூரன்ஸ்தான், குறைவான பிரீமியத்தில் அதிக
கவரேஜ் தரும் பாலிசியாக இருக்கும். இந்த
டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டும்தான் இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் எந்த
முதிர்வுத் தொகையும் பாலிசிதாரருக்குக் கிடைக்காது.
இதை
மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்
|
Sep 9, 2013
அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து பாலிசிகள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment