Powered By Blogger

Sep 14, 2013

காலாவதியான பாலிசி... எப்படி புதுப்பிக்கலாம்..?



தெரிந்தோ, தெரியாமலோ ஒரு சில மாதம் பிரீமியத்தைக் கட்டாமல் விட்டால்கூட இன்ஷூரன்ஸ் பாலிசி 'லேப்ஸ்ஆகிவிடுகிறது.

 இதுமாதிரி 'லேப்ஸ்ஆன பாலிசியை எப்படி புதுப்பித்துக்கொள்வது,
 அதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் எல்..சி.யின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்.  

''பல சமயங்களில் பிரீமியம் கட்டும் கால அளவைத் தேர்வு செய்வது, பாலிசி 'லேப்ஸ்ஆவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
 அதாவது, நீங்கள் மாதா மாதம் பிரீமியம் கட்டும் முறையைத் தேர்ந்தெடுத்தால், திடீரென ஒரு மாதம் பிரீமியத்தைக் கட்டாவிட்டாலும் உங்கள் பாலிசி 'லேப்ஸ்ஆகிவிடும். காரணம், மாதா மாதம் பிரீமியம் கட்டும்போது நமக்குக் கிடைக்கும் கருணைக் காலம் வெறும் 15 நாட்கள் மட்டுமே.
 ஆனால், காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு காலத்தைத் தேர்வு செய்தால், இந்தச் சிக்கலில் இருந்து எளிதில் தம்பிக்கலாம். இதற்கான கருணைக் காலம் அதிகம்'' என்றவர், பாலிசியை எப்படி புதுப்பிப்பது என்பதை எடுத்துச் சொன்னார்.
''பாலிசிக்கான பணத்தை ஒன்றிரண்டு மாதம் கட்டவில்லை எனில், அபராதத்துடன் அந்த பிரீமியத்தைக் கட்டி பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஆறு மாதத்திற்கு மேல் பிரீமியம் கட்டாமல் விட்டால், அந்த பாலிசி 'லேப்ஸ்ஆகிவிடும். இந்த பாலிசியைப் புதுப்பிக்கும்போது, நீங்கள்  நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.  
அதாவது, உடல்நலச் சான்று, உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் ஒரு சாட்சி கையெழுத்து வாங்கி தருவது போன்ற வற்றை செய்யவேண்டும். இதில் மருத்துவச் சான்று என்பது ஒரு விண்ணப்பமாக இருக்கும். இதை பாலிசிதாரர் பூர்த்தி செய்து, உரிய கிளையில் ஒப்படைக்கவேண்டும்'' என்றவர்

 பாலிசியைப் புதுப்பிக்கும்போது என்னென்ன சிக்கல் வரும், அதை எப்படி சமாளிப்பது என்பதைத் தெளிவாக்கினார்.
''பாலிசி எடுத்தபோது தந்த மருத்துவச் சான்றிதழுக்கும், பாலிசியைப் புதுப்பிக்கும்போது தரும் மருத்துவச் சான்றிதழுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், பாலிசிதாரரை நேரில் அழைத்து, பல கேள்விகளைக் கேட்கவும், மீண்டும் பரிசோதனை செய்து வரும்படி சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் பாலிசியையே ரத்து செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

உதாரணமாக, பாலிசி எடுக்கும் போது நீங்கள் தந்த மருத்துவச் சான்றிதழில் உங்களது உயரம் 160 செ.மீ என்று தந்துவிட்டு, பாலிசியைப் புதுப்பிக்கும்போது 165 செ.மீ. என்று தந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களை நேரில் அழைத்து, மீண்டும் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துவரச் சொல்லும்.

ஒரு பாலிசியை எடுத்து ஐந்து வருடம் தொடர்ந்து பிரீமியம் கட்டியபிறகு தவிர்க்க முடியாதச் சூழ்நிலையில் அந்த பாலிசி 'லேப்ஸ்ஆனால் பெரிய அளவில் பிரச்னை இருக்காது.
 ஏனெனில், அந்தச் சமயத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவச் சான்றிதழில் அதிக கட்டுப்பாடுகளையும் விதிக்காது. ஆனால், அதிக வயது, பாலிசியின் கவரேஜ் தொகை அடிப்படையில்தான் இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.
எந்த ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியையும் முடிந்தவரை 'லேப்ஸ்ஆகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், 'லேப்ஸ்ஆன பாலிசியைப் புதுப்பிக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அபராதம் விதிக்கவும் செய்யும்.

  எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வருடத்திற்கான போனஸ் தொகையும் கிடைக்காது'' என்றவர், பாலிசி 'லேப்ஸ்ஆகாமல் தடுக்க சில டிப்ஸ்களையும் தந்தார்.

* வருடத்தின் ஆரம்பத்திலேயே இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டும் தேதியை காலண்டரில் குறித்து வைக்கலாம்.
* பிரீமியம் கட்டும் தேதியை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி வைக்கலாம். அல்லது வங்கி மூலம் .சி.எஸ். கொடுக்கலாம்.
* முகவரியில் மாற்றம் இருந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிப்பது நல்லது. அப்போதுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அனுப்பும் கடிதங்கள் நமக்குக் கிடைக்கும்.
* வேலையின் காரணமாக வெளியூருக்கு மாற்றல் ஆகிச் செல்கிறவர்கள், முன்கூட்டியே பாலிசியை அந்த ஊரில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்துகொள்ளலாம்.''
இன்ஷூரன்ஸ் எடுப்பதே அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் குடும்பத்திற்கு நிதி ஆதாரம் ஏற்படுத்துவதற்குதான் என்பதால், பாலிசியை 'லேப்ஸ்ஆக விடாமல் தொடர்ந்து பிரீமியம் கட்டுங்கள்!

No comments:

Post a Comment