Powered By Blogger

Jun 1, 2015

சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த பசுமையான நினைவுகள்

சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த பசுமையான நினைவுகள்:

��வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.

��ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.

��திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.

��தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.

��பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.

��முழு ஆண்டு விடுமுறையில் மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு டூர் போனோம்.

��ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு அன்று முளுவதும் செலவு செய்தோம்.

��100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம்.

��அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது.

��பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே படம் முளுவதையும் பார்த்து ரசித்தோம்.

��பீரோக்கள் முளுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம்.

��ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம்.

��பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.

��10வது 12வது ரிசல்ட் பார்க்க தினந்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.

��15வயதுவரை டவுசர்களையே அணிந்திருந்தோம்.

��பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.

��கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா மாடல் சடை போட்டு அழகுபார்த்தார்கள்.

��பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.

��ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.

��நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள்.

��கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.

மலரும் நினைவுகள்!!!!.

No comments:

Post a Comment