Powered By Blogger

May 28, 2017

N.S.கிருஷ்ணன். மை

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.
  
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
*மையை* 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

சிலர்

*தற்பெரு“மை“*யில்

தொட்டு எழுதுகிறார்கள்.

சிலரோ

*பொறா“மை“*யில்

தொட்டு எழுதுகிறார்கள்.
வேறு சிலரோ

*பழ“மை“*யில்

தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.

இவற்றையெல்லாம்

*அரு“மை“*யான

எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில

*“மை“கள்*
உள்ளன.

இவை என்ன தெரியுமா?
*கய“மை“*,
*பொய்“மை“*,
*மட“மை“*,
*வேற்று“மை“* ஆகியவைதாம்.

கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய

*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?

*நன்“மை“* தரக்கூடிய

*நேர்“மை“*,
*புது“மை“*,
*செம்“மை“*,
*உண்“மை“*.

இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?
*வறு“மை“*,
*ஏழ்“மை“*,
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே.
இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்

*கட“மை“* யாகவும்,

*உரி“மை“ யாகவும்*

கொண்டு சமூகத்திற்குப்

*பெரு“மை“*

சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன.

No comments:

Post a Comment