Powered By Blogger

May 1, 2017

ஞாயிற்றுக்கிழமை

அன்பு நண்பர்களே, இனிய வணக்கம்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று, ஒன்று நீங்கள் ஓய்வெடுக்கிறேன் என்று முடிவெடுத்து, TV பார்த்துக் கொண்டு, அரசியல் பேசிக் கொண்டு காலத்தை வெட்டியாகக் கழிக்கலாம். அல்லது, ஓய்வுக் காலத்தை மனதில் இருத்தி, இன்று மிகக் கடுமையாக உழைக்கலாம். ஞாயிற்றுக் கிழமை கூட ஓய்வெடுக்கக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். ஞாயிற்றுக் கிழமை என்பது ஓய்வுக்காக என்று நாமாகத் தீர்மானித்துக் கொண்டது. அத்துணை சாதனையாளர்களும் ஞாயிற்றுக்கிழமையை தங்கள் தனித்திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும், அள்ளது கூர் தீட்டிக் கொள்ளும் நாளாகப் பார்க்கிறார்கள். சச்சின் தெண்டுல்கரும், கமலஹாசனும், முகேஷ் அம்பானியும, இந்திரா நூயியும், சானியா மிர்சாவும் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் மெனக் கெடுகிறார்கள். ஒன்று தெரியுமா ?!. வியாபார உலகத்தின் மிக முக்கிய முடிவுகளும், மிகப் பெரிய விற்பனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கையெழுத்திடப் படுகின்றன. ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஒவ்வொரு குடும்பத தலைவனுக்கும், தன் குடும்பத்திற்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றிய எண்ணங்கள் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அதிகமாக இருக்குமாம். எனவே, இன்சூரன்ஸ் துறையில் உள்ள நாமும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று நீங்கள் கடுமையாக உழைத்தால், உங்கள் ஓய்வு காலத்தின் ஒவ்வொரு நாளையும் ஞாயிற்றுக்கிழமை போலக் கொண்டாடலாம். வாழத்துக்கள்......

No comments:

Post a Comment