Powered By Blogger

May 14, 2017

பணம்

என்னை இன்று
பாதுகாத்தால்
உன்னை என்றும்
பாதுகாப்பேன்.
- சொன்னது பணம்.

செல்வாக்கு கூடினால்
சொல்வாக்கும் கூடும்.

பணத்தை நேசிக்கனும்.

பணத்துக்காக வாழனும்
என்ற அரத்தமல்ல!
பணமில்லாமல்
வாழ முடியாது
என்ற அரத்தம்!

ஆசை ஆபத்து என்பார்!
அதுதான் ஆபத்து என்பேன்!

நியாயமான ஆசையே
நம்மை ஓடவைக்கும்!
நம்மை தேட வைக்கும்!

எதுவே வேண்டாம்
என்றாலும்
பசி வருமே!

எல்லோரும் சமம்
எனபதற்காக
எல்லோரும்
ஏன் ஏழையாக இருக்கனும்?
எல்லோரும் பணக்காரராக
ஏன் ஆக கூடாது?

சிந்திப்போம்!
சந்திப்போம்!
சம்பாதிப்போம்!
சேமிப்போம்!

ஆறுதல் சொல்ல
ஆயிரம்பேர் வரலாம்!
ஆனாலும்
அடுத்த வேளைக்கு
பணம் வேண்டுமே!

பணத்தை நேசியுங்கள்!
பணத்தை சேமியுங்கள்.!

சட்டைப்பையில் பணம்
இல்லையென்றால்
சங்கடம் எவ்வளவு?
சடைப்பையை சட்டையின்
இடதுபக்கம் வைத்ததே
இதயத்தோடு இணக்கமாக
இருக்கவே!

உழைத்து சேரக்கும் பணம்
நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment