சுலபமாக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
ஒரு வெற்றியை எதிர்பார்க்கும்போதே,அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிழல் போலத் தொடர்ந்து வரும்.எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும் அங்கே ஏமாற்றத்துக்கும் இடம் இருக்கும்.
எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ,அங்கே எரிச்சல் தானாகவே வேகத் தடையாகக் குறுக்கிடும்.
காத்திருக்கப் பொறுமை இல்லாமல் கவனம் சிதறும்.
முடிவைப் பற்றிய சிந்தனை இல்லாமல், செய்வதை முழு விருப்பத்துடன் செய்து பாருங்கள்.
வெற்றியை பற்றி எண்ணிக் கொண்டிராமல் முழு ஈடுபாட்டுடன் செயல் படுங்கள்.
அப்போது தோல்வி பற்றிய பயம் வராது.பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது.பதற்றம் இல்லாத இடத்தில் கவனம் சிதறாது.
கவனம் சிதறாதபோது செயலிலே மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத் திறமையும் வெளிப்படும்.
அப்போது வெற்றி நிச்சயம்!
No comments:
Post a Comment