Powered By Blogger

Aug 31, 2015

ஓஷோ துளிகள்

ஓஷோ துளிகள்

மனமும் மூளையும் உடலின் பாகங்கள். மனம் திட்டம்
போன்றது, மூளை அந்த திட்டத்தை போடும் கம்ப்யூட்டர் போன்றது.

 

எந்த கம்ப்யூட்டரும் மனிதனின் மனதை விட அதிக
திறனுள்ளது அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. ஏனெனில் அந்த கம்ப்யூட்டரை
உருவாக்கியதே மனிதனின் மனம்தானே.

 

கோவில் என்பது உண்மையில் ஒன்றே ஒன்றுதான். அது
நீதான். நீ உனக்குள் செல்ல வேண்டும்.

 

தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும்
புனிதத்தலத்திற்க்கு கூட்டிச்செல்லும். நீ அங்கே கடவுளை காணலாம், வேறு எங்கும் காண முடியாது.

 

உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதே போல
உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும்.

 

எல்லா கருத்துக்களையும் விட்டுவிடு. நீ நீயாக இரு, வேறு யாராவது ஒருவரைப் பார்த்து அவரை போல மாற முயற்சி செய்து கொண்டிருக்காதே.

 

புத்திசாலியான மனிதன் மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பான். அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது.

 

உன்னுடைய வாழ்க்கையின் விதம் பற்றியும் வாழும் முறை பற்றியும் உன்னுடைய விழிப்புணர்வு முடிவு செய்யட்டும், வேறு யாரும் உனக்காக
அந்த முடிவை எடுக்க நீ அனுமதிக்காதே.

No comments:

Post a Comment