Powered By Blogger

Sep 14, 2016

இப்படிக்கு, ஆயுள் காப்பீடு

பிள்ளை செல்வம் இருந்தாலும் கூட,
என்னையும் சேர்த்து தத்தெடு.

சில காலம் கழித்து,
செல்வமாய் உன் கையில்,
நான் வருவேன்.

உடல் அலுத்து உட்காரும் போது,
ஓய்வூதியமாக,
நான் வருவேன்.

உடலற்று போனாலும் கூட,
உனக்காக,
மறுபிறவி எடுப்பேன்.

வாழும் போது நீ,
என்னை சுமந்தால்,
உன் வாழ்க்கைக்கு பிறகு,
உன் சுமையை நான் சுமப்பேன்.

இப்படிக்கு,
ஆயுள் காப்பீடு
( Life Insurance)

No comments:

Post a Comment