Powered By Blogger

Sep 26, 2015

அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்,

�� கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!

������������������

��எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல...!!!

������������������

��ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!

������������������

��நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!

������������������

��ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!

������������������

��முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!

������������������

��அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!

������������������

��தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!

������������������

��எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!

������������������

��அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!

������������������

��கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!

������������������

��மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!

������������������

��துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!

������������������

��அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!

������������������

No comments:

Post a Comment